உலகம்

பனிச்சரிவு

ஆஸ்திரியாவில் சோகம் - பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

Published On 2023-02-05 20:56 GMT   |   Update On 2023-02-05 20:56 GMT
  • ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
  • இதில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

வியன்னா:

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.

இந்நிலையில், பள்ளி விடுமுறையைக் கொண்டாடும் விதமாக ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.

இந்த பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News