உலகம்

பாகிஸ்தானில் 3.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

Published On 2025-10-22 00:48 IST   |   Update On 2025-10-22 00:48:00 IST
  • பாகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் பதிவானது.
  • இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் நேற்று இரவு 8.52 மணிக்கு 3.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்தனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, நேற்று அதிகாலை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரை மையமாகக் கொண்டு 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News