உலகம்

மீடியாக்களிடம் உரையாடிய ஷேக் ஹசீனா: இந்திய துணை தூதரை அழைத்து கவலை தெரிவித்த வங்கதேசம்

Published On 2025-11-12 21:36 IST   |   Update On 2025-11-12 21:36:00 IST
  • வங்கதேசத்தில் இருந்து தப்பியோடிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
  • ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

வங்கதேசத்தில் கடந்த வருடம் போராட்டம் வெடித்தது. இதனால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் மீது முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசு பல வழக்குகளை பதிவு செய்தது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா முன்னணி வெளிநாடு மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மீடியாக்களுடன் உரையாடினார். இந்த நிலையில் டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரை அழைத்து, இந்த விசயம் தங்களுக்கு மிகக் கவலை அளிக்கிறது. ஷேக் ஹசீனா மீடியாக்களை சந்திப்பதை உடடினாக துண்டிக்க வேண்டும் என்ற வங்கதேசம் வேண்டுகோள் விடுத்ததாக, இந்திய அரசிடம் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News