உலகம்
தொடரும் போராட்டம்

இலங்கை அதிபர் பதவி விலக வலியுறுத்தி 50 நாளை கடந்தும் தொடரும் போராட்டம்

Published On 2022-05-28 15:11 GMT   |   Update On 2022-05-28 15:11 GMT
ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலில் இருந்து விலகினால் மட்டுமே எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு:

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

இதற்கிடையே, புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார். நிதித்துறை பொறுப்பையும் அவரே ஏற்றுள்ளார். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பல்வேறு திட்டங்களை ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு செய்து வருகிறது.

புதிய அரசு அமைந்தாலும், அந்நாட்டு அதிபர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், இலங்கை அதிபர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று போராட்டம் 50-வது நாளை எட்டியுள்ளது. போராட்டம் 50-வது நாள் எட்டியதை குறிக்கும் வகையில் பேரணியும் நடைபெற்றது. 

Tags:    

Similar News