உலகம்
குழந்தை

செனகல் நாட்டு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 குழந்தைகள் உயிரிழப்பு

Published On 2022-05-26 03:29 GMT   |   Update On 2022-05-26 03:29 GMT
செனகல் நாட்டு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.
திவாவோன்:

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று செனகல். இந்த நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகர் உள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த நாட்டின் அதிபர் மேக்கி சால் கூறும்போது "பொது மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் இறந்ததை அறிந்து நான் வேதனை அடைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News