செய்திகள்

இலங்கையில் 8-வதாக மற்றொரு இடத்தில் குண்டுவெடிப்பு - நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

Published On 2019-04-21 09:53 GMT   |   Update On 2019-04-21 11:36 GMT
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வரிசையில் தெம்மட்டகொடா குடியிருப்பு பகுதியில் 8-வதாக மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #SriLankablasts #SriLankacurfew #Colomboblast
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல்களில் காயமடைந்த சுமார் 500 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொழும்புவில் உள்ள தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்  இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஏழாவதாக நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.



அடுத்த சில நிமிடங்களில் தெம்மட்டகொடா என்ற இடத்தில் மஹவிலா உதயனா சாலையில் உள்ள ஒரு பகுதியில் எட்டாவதாக ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பலி தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. நாளையும் நாளை மறுநாளும் (ஏப்ரல் 22,23) அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #SriLankablasts #SriLankacurfew #Colomboblast
Tags:    

Similar News