செய்திகள்

சோமாலியாவில் இரட்டை குண்டுவெடிப்பு - 8 பேர் பலி

Published On 2018-12-22 19:44 GMT   |   Update On 2018-12-22 19:44 GMT
சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #SomaliaBlast #DoubleBombing #PresidentialPalace
மாஸ்கோ:

சோமாலியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அல்கொய்தா ஆதரவு பெற்ற அல்ஷபாப் பயங்கரவாதிகள் ஆயுத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் மத அடிப்படையிலான அரசை நிறுவ போராடி வருகின்றனர். இந்த நிலையில், அங்கு தலைநகர் மொகாதிசுவில் அதிபர் மாளிகை அருகே நேற்று வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் அந்தப்பகுதியே குலுங்கியது.

இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்களில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை, கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த கார் குண்டுவெடிப்புகள், உள்ளூர் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.#SomaliaBlast #DoubleBombing #PresidentialPalace
Tags:    

Similar News