செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பள்ளி வகுப்பறையில் குண்டு வெடிப்பு - 48 மாணவர்கள் உயிரிழப்பு

Published On 2018-08-15 15:07 GMT   |   Update On 2018-08-15 15:07 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரில் உள்ள பள்ளி வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 48 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Kabul #Afghan
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் அருகே உள்ள தாஷ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியில் தனியார் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மையத்தில் உள்ள வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 48 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் இருந்த வகுப்பறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பலியான அனைவருக்கும் 18 வயதுக்கும் குறைவாக இருக்கும் என குண்டு வெடிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News