செய்திகள்

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் சர்தாரி போட்டி

Published On 2018-05-28 05:49 GMT   |   Update On 2018-05-28 05:49 GMT
பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் ஆசிப்அலி சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.#AsifAliZardari #parliament
கராச்சி:

பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.

அதில் முன்னாள் அதிபர் ஆசிப்அலி சர்தாரி (62) பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இத்தகவலை சிந்து மாகாண முதல்-மந்திரி சயீத் முராத் அலி ஷா அளித்த இப்தார் விருந்தின்போது அறிவித்தார்.

இவர் தனது சொந்த தொகுதியான நவாப்ஷாவில் களம் இறங்குகிறார். இதன் மூலம் அவர் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி அரசியலுக்கு வருகிறார்.

இவர் 1987-ம் ஆண்டு பெனாசிர் பூட்டோவை மணந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 1990-ம் ஆண்டு கராச்சியில் உள்ள லியாரி தொகுதியில் போட்டியிட்டார். 1993-ம் ஆண்டு கராச்சியில் உள்ள லியாரி தொகுதியில் போட்டியிட்டார். 1993-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நவாப்ஷா தொகுதியில் களம் இறங்கினர்.

2007-ம் ஆண்டு பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் மக்கள் கட்சியை வழி நடத்தினார்.

2008 பாராளுமன்ற தேர்தலில் கட்சியை வெற்றி பெற செய்தார். அதையடுத்து 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் 11-வது ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துள்ள அவர் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றார்.#AsifAliZardari #parliament
Tags:    

Similar News