செய்திகள்

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சீக்கியப்பெண் போலீஸ் அதிகாரியாக நியமனம்

Published On 2018-05-20 19:06 GMT   |   Update On 2018-05-20 19:06 GMT
அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக குர்சோச் கவுர் என்ற சீக்கியப் பெண் துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #GursoachKaur #TurbanedPoliceOfficer
நியூயார்க்:

அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக சீக்கியப் பெண் ஒருவர், துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அவரது பெயர், குர்சோச் கவுர். இவர் கடந்த வாரம் தான் நியூயார்க் போலீஸ் அகாடமியில் படித்து முடித்தார்.

இந் நிலையில் அவர் நியூயார்க் நகர துணை போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது அங்கு உள்ள சீக்கிய மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்து உள்ளது.



இதுபற்றி சீக்கிய அதிகாரிகள் சங்கம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள ஒரு பதிவில், “நியூயார்க் நகரில் தலைப்பாகை அணிந்த முதல் பெண் துணை போலீஸ் அதிகாரியை வரவேற்கிறோம். அவரை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். நீங்கள் இந்தப் பதவியில் அமர்வது, இதே போன்று சட்ட அமலாக்கல் துறையில் நாமும் அமர வேண்டும் என்ற உந்துதலை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது” என கூறப்பட்டு உள்ளது.  #GursoachKaur #TurbanedPoliceOfficer

Tags:    

Similar News