செய்திகள்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: போலீஸ் அதிகாரி பலி - 13 பேர் படுகாயம்

Published On 2018-05-11 15:28 IST   |   Update On 2018-05-11 15:28:00 IST
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் மற்றும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #PakistanBlast
பெஷாவர்:

பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் எல்லையையொட்டி உள்ள பழங்குடியின பகுதியில் கொஹாட் நகர் அமைந்துள்ளது. அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே இன்று போலீஸ் வேன் கடந்து சென்ற போது அருகில் இருந்த இருசக்கர வாகனத்தில் வைக்கப்படிருந்த குண்டு பயங்கர சத்ததுடன் வெடித்தது.

இதில் வேனில் பயணம் செய்த போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்த பொதுமக்களில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பகுதியில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanBlast
Tags:    

Similar News