உலகம்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு - 13 தொழிலாளர்கள் பரிதாப பலி

Published On 2023-08-20 21:45 GMT   |   Update On 2023-08-20 21:45 GMT
  • பாகிஸ்தானில் தொழிலாளர்கள் சென்ற வேனில் குண்டு வெடித்தது.
  • இந்த குண்டு வெடிப்பில் 13 தொழிலாளர்கள் பலியாகினர்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ராணுவச் சாவடியில் கட்டுமான பணிக்கு செல்லும்போது தொழிலாளர்கள் சென்ற வேனில் வெடிகுண்டு வைத்து இந்த கோர சம்பவத்தை நடத்தியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

குண்டுவெடிப்பில் பலியானவர்கள் தெற்கு வஜிரிஸ்தானில் உள்ள மக்கின் மற்றும் வானா தெஹ்சில் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் மேலும் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் குண்டு வெடித்து பலியானது பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News