செய்திகள்
ஐ.ஆர்.சி.டி.சி சேவைக்கு புதிய வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி அறிமுகம் செய்ய திட்டம்
இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. சேவைக்கென பிரத்தியேகமாக இயங்கும் புதிய வலைத்தளம் மற்றும் மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி தளம் போதிய வேகம் கொண்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. டிக்கெட் முன்பதிவின் போது அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் தற்சமயம் பயன்படுத்தும் தளத்திற்கு மாற்றாக புதிய வலைத்தளம் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் மொபைல் செயலி உள்ளிட்டவற்றை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய வலைத்தளம் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலும், அதிகப்படியான பிழைகள் இன்றியும் இயங்கவும், எளிமையாக லாக்-இன் செய்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் பயன்படுத்தப்படும் வலைத்தளம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இடையிடையை கோளாறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
கூடுதலாக வலைத்தளம் மற்றும் மொபைல் செயலிக்களில் புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. அதன்படி டிக்கெட் உறுதி செய்த பின் டிஸ்ப்ளே செய்வது, தரவுகளை கொண்டு பயணங்களை திட்டமிடுவது மற்றும் தட்கல் போன்று இந்திய ரயில்வேயின் சேவைகளை சரிவர பயன்படுத்துவதற்கென அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் எஸ்.எம்.எஸ். மூலம் ரயில் வந்து செல்லும் நேரத்தை பயணிகளுக்கு தெரிவிப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் ரயில் நேரம் தாமதமாவது, அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்லும் நேரம் மற்றும் குறிப்பிட்ட ரயில் செல்லும் இறுதி ரயில்வே நிலையம் சார்ந்த தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த அம்சங்கள் புதிய செயலி மற்றும் வலைத்தளங்ளில் இஸ்ரோவின் உதவியுடன் சேர்க்கப்படலாம் என்றும், இதற்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் பயணங்களை திட்டமிடும் சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வியாபாரத்தை பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளளாக கூறப்படுகிறது.
மேலும் ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு வேகமாக டிக்கெட் முன்பதிவு மேற்கொள்ள முடியும் என்பதோடு இதன் எளிய இன்டர்ஃபேஸ் மற்றும் அம்சங்கள் பாதுகாப்பாகவும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.
இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி தளம் போதிய வேகம் கொண்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. டிக்கெட் முன்பதிவின் போது அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் தற்சமயம் பயன்படுத்தும் தளத்திற்கு மாற்றாக புதிய வலைத்தளம் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் மொபைல் செயலி உள்ளிட்டவற்றை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய வலைத்தளம் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலும், அதிகப்படியான பிழைகள் இன்றியும் இயங்கவும், எளிமையாக லாக்-இன் செய்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் பயன்படுத்தப்படும் வலைத்தளம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இடையிடையை கோளாறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
கூடுதலாக வலைத்தளம் மற்றும் மொபைல் செயலிக்களில் புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. அதன்படி டிக்கெட் உறுதி செய்த பின் டிஸ்ப்ளே செய்வது, தரவுகளை கொண்டு பயணங்களை திட்டமிடுவது மற்றும் தட்கல் போன்று இந்திய ரயில்வேயின் சேவைகளை சரிவர பயன்படுத்துவதற்கென அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் எஸ்.எம்.எஸ். மூலம் ரயில் வந்து செல்லும் நேரத்தை பயணிகளுக்கு தெரிவிப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் ரயில் நேரம் தாமதமாவது, அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்லும் நேரம் மற்றும் குறிப்பிட்ட ரயில் செல்லும் இறுதி ரயில்வே நிலையம் சார்ந்த தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த அம்சங்கள் புதிய செயலி மற்றும் வலைத்தளங்ளில் இஸ்ரோவின் உதவியுடன் சேர்க்கப்படலாம் என்றும், இதற்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் பயணங்களை திட்டமிடும் சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வியாபாரத்தை பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளளாக கூறப்படுகிறது.
மேலும் ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு வேகமாக டிக்கெட் முன்பதிவு மேற்கொள்ள முடியும் என்பதோடு இதன் எளிய இன்டர்ஃபேஸ் மற்றும் அம்சங்கள் பாதுகாப்பாகவும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.