தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2025-09-09 14:09 IST   |   Update On 2025-09-09 14:09:00 IST
  • மாதம் தோறும் ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை ஊதியம் கிடைத்து வந்துள்ளது.
  • 17 கூலி தொழிலாளர்களை வேண்டாம் என மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூர்:

திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் ஏராளமான லாரி புக்கிங் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பனியன் உள்ளிட்ட பின்னலாடை பொருட்கள் இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சரக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இதற்காக வரும் சரக்குகளை குடோன்களில் இருந்து லாரிகளில் ஏற்றவும் லாரிகளில் இருந்து குடோன்களில் இறக்கவும் சுமார் 17 சுமைப்பணி தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்களுக்கு மாதம் தோறும் ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை ஊதியம் கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வேறொரு குடோனில் பணியாற்றி வந்த 7 வட மாநில தொழிலாளர்களை 2 குடோன்களுக்கும் சேர்த்து வேலை பார்க்க அனுமதிக்க வைத்துவிட்டு 17 கூலி தொழிலாளர்களை வேண்டாம் என மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் ஏ.டி.பி., தொழிற்சங்கத்தினர் தமிழக தொழிலாளர்களை பணியமர்த்த நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாக தரப்பு மற்றும் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்தி சமூகத் தீர்வு காண்பது எனவும் அதுவரையில் தொழிலாளர்கள் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

Similar News