தமிழ்நாடு செய்திகள்

மகளிர் இலவச பஸ்சில் ஏற அனுமதி மறுப்பு? - கண்டக்டருடன் பெண்கள் வாக்குவாதம்

Published On 2025-06-24 14:47 IST   |   Update On 2025-06-24 14:49:00 IST
  • மதுரையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் கையில் குழந்தையுடன் அரசு பஸ்சில் ஏறி உள்ளனர்.
  • இலவச பஸ் என்பதால் தங்களை பஸ்சில் ஏற மறுப்பு தெரிவித்து கண்டக்டர் அவமதிப்பதாக கூறி பஸ்சை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவி பகுதியில் இருந்து மெயின் அருவிக்கு பயணம் செய்வதற்காக மதுரையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் கையில் குழந்தையுடன் அரசு பஸ்சில் ஏறி உள்ளனர்.

அப்போது பஸ் கண்டக்டர் அந்த பெண்களை கீழே இறங்குமாறு கூறியதோடு, அலட்சியமாக அடுத்த பஸ்சில் வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இலவச பஸ் என்பதால் தங்களை பஸ்சில் ஏற மறுப்பு தெரிவித்து கண்டக்டர் அவமதிப்பதாக கூறி பஸ்சை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சுற்றியுள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒன்று கூடி பஸ் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News