தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 28,500 கனஅடியாக குறைந்தது

Published On 2025-09-03 11:12 IST   |   Update On 2025-09-03 11:12:00 IST
  • கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
  • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது. இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 35 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 29 ஆயிரத்து 300 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரிடெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் 28 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News