தமிழ்நாடு செய்திகள்

உதயநிதி வருகை எதிரொலி - சேப்பாக்கம் தொகுதியில் குடிசையை மறைக்க அமைக்கப்பட்ட திரைச்சீலை

Published On 2025-06-23 15:12 IST   |   Update On 2025-06-23 15:12:00 IST
  • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, சி.ஐ.டி குடியிருப்பு முதல் தெருவில் வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவு நீர் உந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
  • சேப்பாக்கம் தொகுதியில் ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய், மறுபுறம் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைகள் உள்ளன.

சென்னை:

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, சி.ஐ.டி குடியிருப்பு முதல் தெருவில் 3.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 113 தெருக்களில் வாழும் 50 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6.25 எம்.எல்.டி செயல்திறன் கொண்ட வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவு நீர் உந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

சேப்பாக்கம் தொகுதியில் ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய், மறுபுறம் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைகள் உள்ளன. இந்த பகுதியின் இருபுறமும் திரைச்சீலை அமைக்கப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி குடிசைப்பகுதியில் திரைச்சீலை போட்டு மறைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

Tags:    

Similar News