கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு
- தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
- தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களை புரிந்திருக்க வேண்டும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
வீர தீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசுடன் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் விருதாளருக்கு வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளதால், இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் நேற்று முதல் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கல்பனா சாவ்லா விருது பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள் :-
* தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
* தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களை புரிந்திருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலம் (மருதம்) (வர்டானா) மொழிகளில் அடுத்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கீழ்க்கண்டவற்றை நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும்.
* விண்ணப்பதாரரின் 4 கருத்துருக்களை தமிழ்-2. ஆங்கிலம்-2 புத்தக வடிவத்தில் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.
* பக்கம் எண்ணுடன் கூடிய உள்ளடக்க அட்டவணை.
* விண்ணப்பதாரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-2
* இணைப்பு-படிவம் I & II, தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் முழுவதுமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
* தைரியம் மற்றும் துணிச்சலுடன் மேற்கொண்ட அனுபவத்தை பற்றி ஒரு பக்கம் எழுத்து விளக்கம்.
* படிவம்-I மற்றும் II முழுமையாக நிரப்பப்பட வேண்டும் (தமிழில்-மருதம் எழுத்துரு, ஆங்கிலத்தில்-வர்டானா எழுத்துரு)
எனவே, அனைத்து மாவட்டங்களிலும், துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கிட ஏதுவாக, இணைய தளத்தின் மூலம் வருகின்ற 16-ந்தேதிக்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.