தமிழ்நாடு செய்திகள்

சென்ட்ரல்- குமரி, நெல்லை- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில்கள்: தென்னக ரெயில்வே அறிவிப்பு

Published On 2025-09-19 15:14 IST   |   Update On 2025-09-19 15:14:00 IST
  • திருநெல்வேலி- செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை வெள்ளி, ஞாயிறு நாட்களில் சிறப்பு ரெயில்கள் .
  • சென்னை செனட்ரல்- கன்னியாகுமரி இடையே செப்டம்பர் 22, 29, அக்டோபர் 6, 13, 20 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள்.

திருநெல்வேலி- செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை வெள்ளி, ஞாயிறு நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 26, 28, அக்டோபர் 3, 5, 10, 12, 17, 19, 24, 26 ஆகிய நாட்களில் செங்கல்பட்டிற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து வாரம் இருமுறை மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

சென்னை செனட்ரல்- கன்னியாகுமரி இடையே செப்டம்பர் 22, 29, அக்டோபர் 6, 13, 20 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். சென்ட்ரலில் ஞாயிறு இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திங்கள் மதியம் 1.50 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மறுமார்க்கமாக குமரியில் இருந்து செப்டம்பர் 23, 30, அக்டோபர் 7, 14, 21 நாட்களில் மதியம் 3.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரெயில்களுக்கு நாளை முதல் முன்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News