தமிழ்நாடு செய்திகள்

8-ம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு: பஸ் போக்குவரத்தை அமைச்சர் சிவசங்கருடன் மாணவி தொடங்கி வைத்தார்

Published On 2024-12-06 10:35 IST   |   Update On 2024-12-06 10:35:00 IST
  • தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாட்டுப்பாடும் போட்டியில் கலந்து கொண்டு தனது மெல்லிசை குரலால் அனைவரையும் கவர்ந்தார்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் தர்ஷினி மற்றும் பள்ளி மாணவர்களை இறக்கி விட்டார்.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் அம்மணபாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர்-அங்காளம்மாள் தம்பதியரின் மகள் தர்ஷினி.

இவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாட்டுப்பாடும் போட்டியில் கலந்து கொண்டு தனது மெல்லிசை குரலால் அனைவரையும் கவர்ந்தார். நிகழ்ச்சியில் பேசிய மாணவி தர்ஷினி தான் படிக்கும் பள்ளிக்கு சென்று வர அம்மணபாக்கம்-அமந்தமங்கலம் வரை பஸ் போக்குவரத்து வசதி இல்லை என்றும், அரசு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இது பற்றிய தகவலறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அம்மணபாக்கம்-அனந்தமங்கலம் பகுதியில் பஸ் போக்குவரத்து சேவையை வழங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் அம்மணபாக்கம்-அனந்தமங்கலம் இடையே இலவச பஸ் சேவையை 8-ம் வகுப்பு மாணவி தர்ஷினி முன்னிறுத்தி தொடங்கி வைத்தார்.

அந்த பஸ்சில் அமைச்சர் சிவசங்கர், மாணவி தர்ஷினியுடன் சென்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் தர்ஷினி மற்றும் பள்ளி மாணவர்களை இறக்கி விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News