தமிழ்நாடு செய்திகள்

அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பு

Published On 2024-12-13 09:16 IST   |   Update On 2024-12-13 09:16:00 IST
  • அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.
  • அமராவதி அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக உள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நேற்று காலை அணையின் நீர்மட்டம் 87.60 அடியாக இருந்த நிலையில், அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு 372 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். நேற்று அணையில் இருந்து 953 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில் அமராவதி அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 36,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

அமராவதி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News