தமிழ்நாடு செய்திகள்

தனுஷ்கோடியில் இலங்கையை சேர்ந்த 3 வாலிபர்கள் அகதிகளாக தஞ்சம்- போலீசார் விசாரணை

Published On 2025-06-28 12:48 IST   |   Update On 2025-06-28 12:48:00 IST
  • குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர்.
  • அகதிகளாக வந்த 3 பேர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்:

இலங்கையில் கடந்த வருடம் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்தது. இதனால் அவதியடைந்த இலங்கை தமிழர்கள் பலர் கள்ளத்தோணி மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.

அவர்களிடம் கடலோர காவல் படை பிரிவு போலீசார் விசாரித்து அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். இலங்கையில் நிலைமை சீரான பிறகு கடந்த அகதிகள் வருகை முற்றிலும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் 3 மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று அவர்கள் அந்த 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் இலங்கை பேச்சாளை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அகதிகளாக வந்த 3 பேர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் பின் அவர்கள் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News