தமிழ்நாடு செய்திகள்
ராமர் நம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி- பிரதமர் மோடி
- இலங்கையிலிருந்து இந்தியா திரும்பும் வழியில் ராமர் பாலத்தை தரிசித்தேன்.
- ராமரின் ஆசீர்வாதம் நமக்கு எப்போதும் இருக்கும்.
ராமேசுவரம்:
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக இலங்கையின் அனுராதாபுரத்திலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மண்டபம் வந்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில்,
இலங்கையிலிருந்து இந்தியா திரும்பும் வழியில் ராமர் பாலத்தை தரிசித்தேன். அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்ற அதே நேரத்தில் பாலத்தை கண்டு தரிசனம் செய்தேன். ராமர் நம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி. அவரது ஆசீர்வாதம் நமக்கு எப்போதும் இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.