எஸ்ஐ பணிக்கு தேர்வானோர் பட்டியல் வெளியிட ஆணை
- முதல் பட்டியலில் இருந்த பல பெயர்கள் இல்லாததால் வழக்கு தொடரப்பட்டது.
- இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட நீதிபதி நியமனம்.
காவலர்கள் பணிக்கு தேர்வானவர்கள் குறித்த இறுதிப்பட்டியலை 30 நாளில் வெளியிட தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
121 எஸ்ஐ பணியிடம், 129 தீயணைப்புத்துறை அதிகாரிகள் காலி பணியிடங்களுக்கு தேர்வானர்கள் பட்டியலை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தப்பட்டு 2024 ஜனவரியில் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.
காவலர்கள் பணித்தேர்வில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவிலலை என புகார் எழுந்தால் திருத்தி முறையாக வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பட்டியல் 2024 அக்டோபரில் வெளியிடப்பட்ட நிலையில் முதல் பட்டியலில் இருந்த பல பெயர்கள் இல்லாததால் வழக்கு தொடரப்பட்டது.
இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஜம்மு ஐகோர்ட் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி தயாரித்த பட்டியல் முறையாக இல்லை; மீண்டும் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஆணையம் முறையிட்டது.
இந்நிலையில், தமிழில் தேர்வெழுதியோருக்கு முன்னுரிமை, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றியுள்ளதால் நீதிபதி தயாரித்த பட்டியலை வெளியட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.