தமிழ்நாடு செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள்- SIR என்றால் உதயநிதிக்கு என்னவென்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன்

Published On 2025-11-11 14:11 IST   |   Update On 2025-11-11 14:11:00 IST
  • 2000-க்கு முன் 10 முறையும், 2000-க்குப் பின் 3 முறை SIR நடைபெற்று இருக்கிறது.
  • SIR நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. அரசு.

கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* இதற்கு முன்பு SIR நடைபெறவில்லையா?

* 2000-க்கு முன் 10 முறையும், 2000-க்குப் பின் 3 முறை SIR நடைபெற்று இருக்கிறது.

* ஏதோ பா.ஜ.க.வே பூதத்தைக்கொண்டு வந்தது போல கொடி பிடித்து போராட்டம் செய்வது ஏன்?

* வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஒரு சூழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

* SIR என்றால் என்னவென்றே துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தெரியவில்லை. வாக்காளர் பட்டியல் ரிவிஷனை ரெஸ்டிரிக்ஷன் என்று கூறுகிறார்.

* SIR நடவடிக்கைக்கு எதிராக கொடி பிடித்து போராடி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க. அரசு.

* ஒரு இடத்தில் கூட வருமான வரித்துறை பதிவு செய்த வழக்குகள் பொய்யாகவில்லை.

* கொளத்தூர் தொகுதியில் 4379 போலி வாக்காளர்கள் உள்ளனர். இதுபோன்ற போலி வாக்காளர்களை நீக்கவே SIR பணி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News