தமிழ்நாடு செய்திகள்

தகுதியான 55 ஆயிரம் பேர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் - விரைவில் கிடைக்க ஏற்பாடு

Published On 2025-12-09 13:51 IST   |   Update On 2025-12-09 13:51:00 IST
  • புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு பொதுமக்கள் பலர் விண்ணப்பித்தனர்.
  • சில மாதங்களாக ரேஷன் கார்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. அதில் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு பொதுமக்கள் பலர் விண்ணப்பித்தனர்.

அந்த மனுக்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் விண்ணப்பித்த, தகுதியான அனைவருக்கும் விரைவில் ரேசன் அட்டைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் தகுதியான சுமார் 55 ஆயிரம் நபர்களுக்கு விரைவில் முழுமையாக ரேஷன் அட்டைகள் விநியோ கிக்கப்பட உள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரிய 1,07,910 விண்ணப்பங்கள் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களாக ரேஷன் கார்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் ரேஷன் அட்டை விநியோகிக்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News