தமிழ்நாடு செய்திகள்

நீலாம்பூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2025-05-19 15:45 IST   |   Update On 2025-05-19 15:45:00 IST
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் தடைபடும்.

கோவை:

முத்துக்கவுண்டன்புதூர் துணை மின்நிலையத்தில் நாளை (20-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் வருமாறு:-

நீலாம்பூர், அண்ணா நகர்-நீலாம்பூர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன்புதூர் ரோடு, பைபாஸ் ரோட்டின் ஒருபகுதி மற்றும் குரும்பபாளையத்தின் ஒரு பகுதி. மேற்கண்ட தகவலை சோமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஆர்.சபரிராஜன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News