சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல இ.பி.எஸ். வாயிலிருந்து பொய் வருகிறது- மு.க.ஸ்டாலின்
- தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, பை - பை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
- உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து இ.பி.எஸ். அவதூறு பரப்பி வருகிறார்.
மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.113.51 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* விமர்சனம் என்கிற பெயரில் நமக்காக விளம்பரம் செய்யும் இ.பி.எஸ்-க்கு நன்றி.
* தேர்தலுக்கு முன் பெட்சீட் போட்டு வாங்கிய மனுக்களை எக்ஸல் ஷீட்டாக மாற்றி வொர்க் ஷீட்டாக மாற்றினேன்.
* மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களையும் சென்றடைகிறது.
* தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, பை - பை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
* சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
* சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் இ.பி.எஸ். வாயிலிருந்து பொய்யாக வருகிறது.
* உங்கள் குடும்ப நலனுக்காக டெல்லி சென்று அ.தி.மு.க.வை அடகுவைத்தவர் எடப்பாடி பழனிசாமி.
* ரெய்டில் இருந்து குடும்பத்தை காக்கவே இ.பி.எஸ். அமித்ஷா வீட்டின் கதவை தட்டினாரே தவிர நமது மக்களுக்காக அல்ல.
* சொந்த கட்சியினரான அ.தி.மு.க.வினரே எடப்பாடி பழனிசாமியை நம்பாதபோது தமிழக மக்கள் எப்படி நம்புவர்?
* குடும்பத்தை காப்பாற்ற டெல்லியின் சதுரங்க வேட்டையில் சிக்கி தொண்டர்களை ஏமாற்றினார் இ.பி.எஸ்.
* தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் அ.தி.மு.க.-வினர் வீட்டுக்கும் போவதை இ.பி.எஸ்.-ஆல் மறுக்க முடியுமா?
* உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து இ.பி.எஸ். அவதூறு பரப்பி வருகிறார்.
* நம்மை ஒருபோதும் ஸ்டாலின் கைவிட மாட்டார் என தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
* தமிழகத்தில் அடுத்து அமைய போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் என்பதை உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்