தமிழ்நாடு செய்திகள்

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை

Published On 2025-04-19 11:20 IST   |   Update On 2025-04-19 11:20:00 IST
  • இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
  • சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் உதவிய வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

திருச்செந்தூர்:

பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 12-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரின் கல்வி வளர்ச்சிக்கு உதவியவர். விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியவர். ஆன்மீக பணிகளை மேற்கொண்டவர். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் உதவிய வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர், அவரது புகழ் என்றென்றும் வாழ்க! என்றென்றும் வாழ்க!!

இவர் அவர் கூறினார்.

Tags:    

Similar News