தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.58 அடியாக உயர்ந்தது

Published On 2024-12-05 09:24 IST   |   Update On 2024-12-05 09:24:00 IST
  • மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
  • மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25,098 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 111.39 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 113.39 அடியாக உயர்ந்து. இன்று காலை 8 மணியளவில் நீர்மட்டம் 114.58 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 85.09 டி.எம்.சி.யாக உள்ளது. இன்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25,098 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் தனது முழுகொள்ளளவை எட்டிவிடும்.

பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News