சென்னை உள்பட 14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!
- சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது.
- சில இடங்களில் காலை 10 மணி வரை இந்த மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. அதேவேளையில் இரவு சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.
நேற்றிரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழை காலை வரை நீடித்தது. இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கன்னியாகுமரி, திருவள்ளூர், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் சாலைகளில் வழுக்கும் வகையில் மழை பெய்யவும், சில இடங்களில் போக்கவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.