தமிழ்நாடு செய்திகள்

7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

Published On 2024-12-12 10:26 IST   |   Update On 2024-12-12 12:12:00 IST
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
  • தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்க வாய்ப்பு. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் நீர் நிலைகள், நீர் வழித்தடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, நாகை ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாய ஏற்படும். தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News