ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
- இரு அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 18 ஆயிரம் கனஅடியாக வந்தது.
தருமபுரி:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், மைசூருவில் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
இதன்காரணமாக இரு அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 18 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.