தமிழ்நாடு செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

Published On 2025-05-25 07:45 IST   |   Update On 2025-05-25 07:45:00 IST
  • வெடிவிபத்தில் பட்டாசு ஆலை கட்டிடம் முற்றிலுமாக தரைமட்டமானது.
  • இன்று விடுமுறை தினம் என்பதால் பெரும் உயிர்தேசம் தவிர்க்கப்பட்டது.

சிவகாசி அருகே அம்மாபட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

அம்மாபட்டியில் உள்ள கணேஷ்வரி பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் பீதியுடன் தெரிவித்தனர்.

வெடிவிபத்தில் பட்டாசு ஆலை கட்டிடம் முற்றிலுமாக தரைமட்டமானது. இன்று விடுமுறை தினம் என்பதால் பெரும் உயிர்தேசம் தவிர்க்கப்பட்டது.

வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். 

Tags:    

Similar News