தமிழ்நாடு செய்திகள்

வாழ்நாள் முழுவதும் தமிழை உயிருக்கு நிகராக கருதி தொண்டாற்றியவர் பாரதிதாசன் - இ.பி.எஸ்.

Published On 2025-04-29 12:12 IST   |   Update On 2025-04-29 12:12:00 IST
  • மொழிப்பற்று, இனப்பற்று, சாதி மறுப்பு உள்ளிட்ட கொள்கைகளை மக்களின் உள்ளங்களில் வளர்த்தெடுத்தவர் கவிஞர் பாரதிதாசன்.
  • புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்,

மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

என்று தமிழ் மொழியின் பெருமைகளை முழங்கி, மொழிப்பற்று, இனப்பற்று, சாதி மறுப்பு உள்ளிட்ட கொள்கைகளை மக்களின் உள்ளங்களில் வளர்த்தெடுத்து, தன் வாழ்நாள் முழுவதும் தமிழை உயிருக்கு நிகராக கருதி தொண்டாற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News