தமிழ்நாடு செய்திகள்

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

Published On 2025-04-05 08:02 IST   |   Update On 2025-04-05 08:02:00 IST
  • பாப்பனாத்தான் பெருமாள் கோவில் ஆறு, சதுரகிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
  • பாதுகாப்பு கருதி நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாப்பனாத்தான் பெருமாள் கோவில் ஆறு, சதுரகிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து இருப்பதாலும், மாலை நேரங்களில் மழை பெய்வதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்தநிலையில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News