தமிழ்நாடு செய்திகள்

சமையல் எண்ணெய் கசிவு- குடத்தில் பிடித்த மக்கள்

Published On 2025-06-08 10:30 IST   |   Update On 2025-06-08 10:30:00 IST
  • லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
  • பொதுமக்களை அப்புறப்படுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு 10,000 லிட்டர் சமையல் எண்ணெயை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

லாரி மீது வாகனம் ஒன்று மோதியதால், லாரியில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் குடங்களை கொண்டு வந்து எண்ணெயை பிடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News