தமிழ்நாடு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
- சிறுமிக்கு அதே பகுதியில் வசித்து வரும் உறவினரான ராஜேஷ் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
- சிறுமியின் பெற்றோர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர், கசவ நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு அதே பகுதியில் வசித்து வரும் உறவினரான ராஜேஷ் (36) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.