தமிழ்நாடு

பழவேற்காட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட தொழிலாளி திடீர் உயிரிழப்பு

Published On 2022-10-14 06:24 GMT   |   Update On 2022-10-14 06:24 GMT
  • முரளி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மீன் குழம்புடன் உணவு சாப்பிட்டார்.
  • முரளி சாப்பிட்ட மீன் குழம்பு அவரது உயிரை பறித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்னேரி:

பழவேற்காடு, குளத்து மேடு, அங்காளம்மன் தெரு வைச் சேர்ந்தவர் முரளி (வயது35). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி குமாரி. இரவு முரளி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மீன் குழம்புடன் உணவு சாப்பிட்டார். பின்னர் வீட்டின் வெளியே கிடந்த நாற்காலியை எடுக்க சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முரளியை மீட்டு பழவேற்காட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது வரும் வழியிலேயே முரளி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் சாப்பிட்ட மீன் குழம்பு உயிரை பறித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீன்குழம்பு சாப்பிட்ட சிறிதுநேரத்தில் தொழிலாளி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News