தமிழ்நாடு செய்திகள்

லாரி மீது சுவர் இடிந்து விழுந்து எரிவாயு கசிவு

Published On 2023-12-09 09:05 IST   |   Update On 2023-12-09 09:05:00 IST
  • வால்வு உடைந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  • லாரியில் ஏற்பட்ட எரிவாயு கசிவை கட்டுப்படுத்த ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் அருகே சமையல் எரிவாயு உடன் நின்றிருந்த லாரி மீது சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. வால்வு உடைந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

லாரியில் ஏற்பட்ட எரிவாயு கசிவை கட்டுப்படுத்த ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

அப்பகுதியில் லாரியை சுற்றி 500 மீட்டர் தொலைவு வரை தீக்குச்சி, செல்போன், டார்ச் லைட் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News