தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்து இருக்கும்- பூங்கா நிர்வாகம் தகவல்

Published On 2022-12-27 03:09 GMT   |   Update On 2022-12-27 03:09 GMT
  • வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

வண்டலூர்:

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வாரம் தோறும் வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும், ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News