தமிழ்நாடு

தடுப்பூசி போடப்பட்ட 4 மாத குழந்தை பலி: போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-09-28 08:00 GMT   |   Update On 2023-09-28 08:00 GMT
  • குழந்தைக்கு முத்தாண்டி பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போடப்பட்டது.
  • தடுப்பூசி போடப்பட்ட குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கபின்-ஏஞ்சலின் தம்பதியர். இவர்களுக்கு சுஜன் என்ற 4 மாத கைக்குழந்தை உள்ளது. நேற்று குழந்தைக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்த முத்தாண்டி பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஊசி போட்டு விட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த குழந்தை சுஜன் அசைவற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனே இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையின் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி போடப்பட்ட குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News