தமிழ்நாடு

ஆடு திருடியதாக கைதான அரவிந்த்குமார், மோகன் ஆகியோரையும், அவர்களை கைது செய்த போலீசாரையும் காணலாம்.

விழுப்புரம் அருகே ருசிகரம்- காதலர் தினத்தை கொண்டாட ஆடு திருடிய 2 வாலிபர்கள்

Published On 2023-02-13 07:11 GMT   |   Update On 2023-02-13 07:11 GMT
  • விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியில் காதலர் தினத்தை கொண்டாட இளைஞர்கள் முடிவு செய்தனர்.
  • போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் காதலர் தினத்தை கொண்டாட ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

விழுப்புரம்:

பிப்ரவரி 14-ந் தேதி ஆண்டுதோறும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது, காதலர்கள் பரிசுகளை வழங்கி, நினைவுகளை பரிமாறி கொள்வார்கள். காதலர் தினம் நெருங்குவதால் இப்போதே காதலர்கள் நினைவு பரிசை தேர்வு செய்து வருகிறார்கள்.

இதேபோல விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியில் காதலர் தினத்தை கொண்டாட இளைஞர்கள் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் ஆடுகளை திருடி உள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பிரங்கிமேடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 20). செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (20). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். எனவே 2 பேரும் காதலர் தினம் கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் கையில் போதுமான பணம் இல்லை.

எனவே ஆடுகளை திருடி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து காதலர் தினம் கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக விழுப்புரம் அருகே மலையரசன் குப்பம் பகுதிக்கு சென்றனர். அங்கு முருகன் மனைவி ரேணுகா என்பவர் தனது வீட்டு வாசலில் 10 ஆடுகளை பட்டி அமைத்து அடைத்து வைத்திருந்தார்.

இவற்றில் 1 ஆட்டை மட்டும் 2 பேரும் திருடி மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றனர். அப்போது ஆடு கத்தியது. சத்தம் கேட்டு ரேணுகா ஓடிவந்தார். அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என உரக்க கத்தினார். இவரது அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடிவந்தனர். ஆடு திருடிய வாலிபர்களை மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் காதலர் தினத்தை கொண்டாட ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News