தமிழ்நாடு

(கோப்பு படம்)

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

Published On 2022-11-08 14:38 GMT   |   Update On 2022-11-08 15:37 GMT
  • மே 21-ம் தேதி நடைபெற்ற தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.
  • குரூப்-2 முதன்மைத் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 25-ந் தேதி நடைபெறும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 5,413 பணியிடங்களுக்கான குரூப் -2 குரூப்-2 ஏ முதல் நிலை தேர்வுகள் கடந்த மேமாதம் 21-ம் தேதி நடைபெற்றது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

http://tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. குரூப் -2 பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News