தமிழ்நாடு செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் பணம் வசூல்

Published On 2023-01-12 12:21 IST   |   Update On 2023-01-12 12:21:00 IST
  • திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது
  • வெள்ளி 8862 கிலோ காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருத்தணி:

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. தேவர் மண்டபத்தில் கோவில் பணியாளர்கள் மூலம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் கடந்த 19 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1 கோடியே 42 லட்சத்து 82 ஆயிரம், தங்கம் 555 கிராமும், வெள்ளி 8862 கிலோவும் காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News