தமிழ்நாடு
நெய் விலை உயர்வு- டி.டி.வி. தினகரன் கண்டனம்
- ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
- இது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.
ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல.இது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?
இவ்வாறு இந்த பதிவில் கூறியுள்ளார்.