தமிழ்நாடு செய்திகள்

மதிப்பெண் குறைந்ததாக தாய் திட்டியதால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2023-09-02 10:34 IST   |   Update On 2023-09-02 10:34:00 IST
  • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கூடச்சேரி அருகே மேலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (41). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் ஷாலினி (13). இவர் வசந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதாக குணசேகரன் மனைவி தீபா மகள் ஷாலினியை திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ஷாலினி பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த தீபா ஷாலினி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷாலினியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர்.

இதுகுறித்து குணசேகரன் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News