தமிழ்நாடு

வங்கக்கடலில் புயல் சின்னம் எதிரொலி- சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை

Published On 2022-12-06 10:29 GMT   |   Update On 2022-12-06 10:29 GMT
  • தமிழகத்தில் வரும் 8ம் தேதி மாலை முதல் கனமழை பெய்யும்.
  • தமிழகத்தின் வானிலை முன்னெச்சரிக்கை குறித்து தலைமை செயலாளருடன் ஆலோசித்ததாக பாலசந்திரன் பேட்டி.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால், தமிழகத்தில் வரும் 8ம் தேதி மாலை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் எதிரொலியால், சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் இறையன்பு உடன், தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, தமிழகத்தின் வானிலை முன்னெச்சரிக்கை குறித்து தலைமை செயலாளருடன் ஆலோசித்ததாக பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

Tags:    

Similar News