தமிழ்நாடு செய்திகள்

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்: 5000 மீனவர்கள் 3-வது நாளாக இன்று மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2023-01-24 10:23 IST   |   Update On 2023-01-24 10:25:00 IST
  • பைபர், விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
  • வேதாரண்யம் பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.

இவர்கள் பைபர், விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேதாரண்யம் பகுதி கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்பட்டதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இன்று 3-வது நாளாகவும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதுடன் படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் இன்றும் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுககளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

Similar News