தமிழ்நாடு
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஆந்திர வாலிபரிடம் ரூ.30 லட்சம் பறிமுதல்
- கைப்பையை போலீசார் சோதனை நடத்தியதில் அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
- சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் தலைமையில் இன்று காலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் சந்தேகப்படும்படியாக பயணி ஒருவர் கையில் பையுடன் இருந்தார். அவரது கைப்பையை போலீசார் சோதனை நடத்தியதில் அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
அவர் கொண்டு வந்த ரூ.30 லட்சத்துக்கு எந்த ஆவணமும் இல்லாததால் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து பறக்கும் படையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் ஞானவேல் (42). ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் என தெரியவந்தது.
சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.